எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரோஜா தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவில் வைத்து காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. இதனையடுத்து அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ, அதற்கு பிரியங்கா தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த நினைத்தோம். அப்பா அம்மாவிற்கு விசா கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் வர முடியவில்லை. இது திட்டமிட்ட திருமணம் தான், ரகசிய திருமணம் இல்லை. சில வருத்தங்கள் இருக்கிறது. ஆனாலும், சீக்கிரமே அவர்கள் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். இது சீக்ரெட் மேரேஜ் இல்லை ஹேப்பி மேரேஜ் தான்' என அதில் பேசியுள்ளார்.