புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரோஜா தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவில் வைத்து காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. இதனையடுத்து அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ, அதற்கு பிரியங்கா தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த நினைத்தோம். அப்பா அம்மாவிற்கு விசா கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் வர முடியவில்லை. இது திட்டமிட்ட திருமணம் தான், ரகசிய திருமணம் இல்லை. சில வருத்தங்கள் இருக்கிறது. ஆனாலும், சீக்கிரமே அவர்கள் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். இது சீக்ரெட் மேரேஜ் இல்லை ஹேப்பி மேரேஜ் தான்' என அதில் பேசியுள்ளார்.