பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
நடிகை மீனாட்சி ஷேஷாத்ரி, நடிகர்கள் ராகுல் ராய் மற்றும் தீபக் திஜோரி ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை பேர்ல் குழும நிறுவனங்களின் ரோனி ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
மீனாட்சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது எனது அதிர்ஷ்டம், இருப்பினும் ரோனி ரோட்ரிகஸின் இந்த நல்ல முயற்சி, இங்கு வந்தது எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
தீபக் திஜோரி கூறுகையில், ‛‛ரோனி ரோட்ரிக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாகப் பார்க்கிறார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் தொடர்ந்து பணியாற்றுகிறார். நான் நடிக்க ஆரம்பித்தபோது மீனாட்சி சேஷாத்ரியுடன் ஒரு படம் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். ராகுல் ராய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நான் மீனாட்சியின் அருகில் அமர்ந்தேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்'' என்றார்.