பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
மிஸ் தமிழ்நாடு, மிஸ்சஸ் தமிழ்நாடு, சவுத் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் ப்ரவீன், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், வெளிநாடு வாழ் பெண் ஒருவரிடம் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் முருகதாஸ் சேர்ந்து 15 லட்சம் வரை சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கேட்டபோது அந்த பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஜோ மைக்கேல் ப்ரவீனை அனுகி ஆதாரத்தை கொடுத்து உதவி கேட்டுள்ளார். அவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விரிவாக எழுதி, பாலாஜி முருகதாஸ் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டும் ஆடியோவையும் ரிலீஸ் செய்துள்ளார். தவிரவும் சட்ட ரீதியான உதவியை அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் முதலில் தைரியமாக புகார் அளித்த அந்த பெண் தற்போது பின்வாங்குவதாகவும், அவரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளதாகவும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த குற்றச்சாட்டானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.