மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மிஸ் தமிழ்நாடு, மிஸ்சஸ் தமிழ்நாடு, சவுத் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் ப்ரவீன், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், வெளிநாடு வாழ் பெண் ஒருவரிடம் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் முருகதாஸ் சேர்ந்து 15 லட்சம் வரை சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கேட்டபோது அந்த பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஜோ மைக்கேல் ப்ரவீனை அனுகி ஆதாரத்தை கொடுத்து உதவி கேட்டுள்ளார். அவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விரிவாக எழுதி, பாலாஜி முருகதாஸ் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டும் ஆடியோவையும் ரிலீஸ் செய்துள்ளார். தவிரவும் சட்ட ரீதியான உதவியை அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் முதலில் தைரியமாக புகார் அளித்த அந்த பெண் தற்போது பின்வாங்குவதாகவும், அவரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளதாகவும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த குற்றச்சாட்டானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.