லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாராசியமான சம்பவங்கள் பற்றி தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் வெளியில் காட்டப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த வகையில், ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கப்பட்ட போது விக்ரமன் எழுந்து கைத்தட்ட ஆயிஷா வருத்தமடைந்திருக்கிறார். ஆனால், விக்ரமன் கைத்தட்டிய காட்சி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் போது காட்டப்படவில்லை. அதன்பிறகு ஆயிஷாவை சமாதானம் செய்ய விக்ரமன் முயற்சித்த காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வாறாக, 'ஜனனி சேவ் ஆனதற்கு தான் கைதட்டினேன்' என்று விக்ரமன் சொல்ல ஆயிஷா முகத்தில் அரைந்தாற் போல் 'புரியது விக்ரம்' என்று மட்டும் சொல்லி கடந்துவிடுவார்.
ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் கதவருகில் நின்று விக்ரமன் மீண்டும் தன்னை புரிய வைக்க முயற்சிப்பார், அப்போதும் ஆயிஷா அதை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார். இதைதான் ஆயிஷா தனது பேட்டியில் சொல்லி வருகிறார். மேலும், விக்ரமன் கேமரா முன்னால் மட்டும் தான் நல்லவராக நடிக்கிறார் என்றும் புகார்கள் எழுந்துள்ளது. ஒருவேளை ஆயிஷா சொல்வது போல் விக்ரமன் கைத்தட்டியது காண்பிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அது அவருக்கு நெகட்டிவாக அமைந்திருக்கும். ஆனால், பிக்பாஸ் விக்ரமனின் மோசமான செயல்களை ஒளிபரப்பாமல் அவரை சேவ் செய்து வருகிறார் என ரசிகர்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.