ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். எமோஷ்னல், பிளாக்மெயில், எதார்த்தமான நடிப்பு என தந்திரமான வில்லனாக வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக செய்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது சகோதர சகோதரிகளை செண்டிமெண்ட்டால் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்யும் மகாநடிகன் குணசேகரனுக்கு நிஜ வாழ்வில் அழவே தெரியாதாம். இதுகுறித்து மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறிய போது, 'என் அப்பா செத்தப்ப கூட மனசுல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர் அவரோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிட்டாரு. எல்லோரும் ஒருநாள் போகத்தான் போறோம்ங்கிற உண்மைய நிலைய புரிஞ்சிக்கிட்டவன் நான். அதனால் எதுக்குமே அழுகுறதே இல்லை. சீரியல்ல கூட க்ளிசரினை ஊத்தித்தான் அழுகுறேன்' என கூறியுள்ளார்.