படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராம், ஆயிஷா, ஜனனி, அசீம், கதிர், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையன்றே எலிமினேட் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராம் மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமின் எவிக்சனை கூட மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் ஆரம்பம் முதலே ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ஆயிஷா சமீபத்திய எபிசோடுகளில் நன்றாக தான் விளையாடினார். மேலும், ஜனனி போன்ற ஆயிஷாவையும் விட குறைவான பெர்பாமன்ஸ் உள்ள நபர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். எனவே, இது உண்மையில் மக்களின் தீர்ப்பல்ல. பிக்பாஸின் தன்னிச்சையான முடிவு என பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.