லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகை வீஜே சித்ரா மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து மீடியாவில் புகழோடு வாழ்ந்து மறைந்தார். அவரது மரணத்தை இன்று வரை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 9ம் தேதி சித்ராவின் இரண்டாமாண்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சித்ராவின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி நேர்காணல் ஒன்றில் சித்ராவின் மரணம் தற்கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், சித்ராவுக்கும் தனக்குமான நட்பை விளக்கி கூறிய சரண்யா, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் சித்ரா மிகவும் சோகமாக இருந்ததாகவும் அதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும் கூறுகிறார். அவர் கூறியதிலிருந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் போதே சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் பிரச்னை உருவாகியிருக்கிறது. குறிப்பாக சீரியலில் முல்லை கதாபாத்திரம் கதிர் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது பிரச்னை பெரிதாகியிருக்கிறது.
என்னால் சமாளிக்க முடியவில்லை. கணவர் (ஹேம்நாத்) கோபப்படுகிறார், என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று சரண்யாவிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், சித்ரா இதுபோன்று இன்னும் பல விஷயங்களை மறைத்து வெளியில் சிரித்தபடியே இருந்தார் எனக்கூறி சரண்யா துராடி அந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார்.