மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டிவி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் 2015ம் ஆண்டிலேயே 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த சரண்யா தற்போது தனது ரூட்டை மாற்றி பைக் ரைடராக மாறியுள்ளார். ஒரு புரொபஷனல் ரைடர் போல உடுப்புகளை மாட்டிக்கொண்டு பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு காண்டினெண்டல் என உயர்ரக பைக்குகளில் ஊர் ஊராக டூரிங் சென்று கொண்டிருக்கிறார். சரண்யாவை திரையில் பார்க்கமுடியாத ரசிகர்கள் பலரும் 'இனி நடிக்க வரமாட்டீங்களா?' என ஏக்கத்துடன் அவரை கேட்டு வருகின்றனர்.