சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
டிவி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் 2015ம் ஆண்டிலேயே 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த சரண்யா தற்போது தனது ரூட்டை மாற்றி பைக் ரைடராக மாறியுள்ளார். ஒரு புரொபஷனல் ரைடர் போல உடுப்புகளை மாட்டிக்கொண்டு பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு காண்டினெண்டல் என உயர்ரக பைக்குகளில் ஊர் ஊராக டூரிங் சென்று கொண்டிருக்கிறார். சரண்யாவை திரையில் பார்க்கமுடியாத ரசிகர்கள் பலரும் 'இனி நடிக்க வரமாட்டீங்களா?' என ஏக்கத்துடன் அவரை கேட்டு வருகின்றனர்.