விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
சின்னத்திரையின் நயன்தாரா என பெயரெடுத்த ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலின் 'சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரியாகிறார். தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் அபிஷேக் சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் வக்கீல் ஜான்சி ராணி என்கிற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை ரச்சிதாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.