கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மகேஸ்வரி. அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் தாயுமானவன், புதுக்கவிதை தொடர்களிலும் நடித்தார். அதன்பிறகு சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சின்னத்திரையில் இருந்தும் விலகினார். ஒரு மகன் பிறந்த நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அதன்பிறகு நடிக்கவும் வந்தார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மகேஸ்வரி அதில் தனது கணவர் வீட்டில் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: மிகுந்த எதிர்பார்ப்போடுதான் திருமணம் செய்தேன். ஆனால் கணவர் வீட்டில் நான் சந்தித்த கொடுமைகள் அதிகம். அங்கு என்னை ஒரு அடிமைபோன்று நடத்தினார்கள். நடிக்ககூடாது என்று தடை விதித்ததோடு ஏற்கெனவே நடித்தவற்றை பற்றி தவறாக பேசினார்கள். நண்பர்கள் யாரும் இருக்ககூடாது, சந்திக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள். நடிக்க தடை விதித்ததால்தான் தொகுப்பாளராக மட்டும் இருந்தேன்.
சீரியல்களில் நடித்தால் குடும்ப மானம் போய்விடும் என்றார்கள். அது மட்டுமின்றி எனது அம்மாவுக்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக் கூடாது என்று தடுத்தார்கள். அம்மாவுக்கு உதவி கிடைக்காததால் எனது அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்தார். ஆண் பிள்ளையாக இருந்தால் அப்படி விடுவார்களா? நானும் அம்மாவை கைவிட முடியாது அதனால் விவாகரத்து முடிவெடுத்தேன். விவாகரத்துக்கு பிறகு நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். எனது பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு மகேஸ்வரி கூறியிருக்கிறார்.