அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் |
சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீநிதி சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சீரியல்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது கவுன்சிலிங்கிற்கு பிறகு சமூகவலைதளத்தில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள அவர் பாசிட்டிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீநிதியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஸ்ரீநிதியையும் அவர் அக்காவையும் அவரது தாயார் தான் தனியாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைப்பருவத்தின் போது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீநிதி, 'அப்பா இனி உங்களை மிஸ் செய்யவே மாட்டேன். நீங்கள் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன். லவ் யூ அப்பா' என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள் சிலர் ஸ்ரீநிதிக்கு ஆதரவான வார்த்தைகளை கமெண்ட் பாக்சில் உதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்ரீநிதி விரைவில் சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.