15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
சின்னத்திரை வரலாற்றில் இதுவரை பார்த்திராத அளவில் 4 மணி நேர சீரியல் கிளைமாக்ஸ் ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளனர். ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக பிரபலமான 'செம்பருத்தி' தொடர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1420 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும். மேலும், நேயர்கள் எதிர்பார்த்திராத வகையில் 16 திருப்பங்களுடன் ஜீ தமிழின் மற்ற சீரியல்களின் கதாநாயகிகளும் இந்த பிரம்மாண்ட கிளைமாக்ஸில் பங்கேற்க உள்ளனர். இதனால் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.