மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வீஜே பார்வதி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். யூ-டியூபில் ஆங்கராக வேலைபார்த்துக் கொண்டிருந்த அவர் சின்னத்திரையில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று சினிமாவிலும் நடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் அடிக்கடி எதாவது கருத்து வீடியோக்களையோ, டூர் வீடியோக்களையோ வெளியிட்டு வந்த அவர் தற்போது தனது பர்சனல் வாழ்க்கை பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழ் சேனலில் அண்மையில் நடைபெற்ற 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் வீஜே பார்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காதல் பற்றியும் பெண்களுக்கான கேரியர் மற்றும் கனவுகள் பற்றியும் பேசியிருந்தார். அந்த வீடியோவின் சிறு பகுதியை பதிவிட்டுள்ள பார்வதி, 'என்னை பொறுத்தவரை காதல் என்பது க்ரேட் பீலிங், கல்யாணம் என்பது பெரிய கமிட்மெண்ட். ஆனால், என் காதலனோ, கணவனோ என் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார் என்றால் எனக்கு அந்த காதலும், கமிட்மெண்ட்டும் தேவையே இல்லை' என மனம் திறந்து கூறியுள்ளார்.