மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 'கோபி ரிட்டர்ன்ஸ்' என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் திருமுருகன் தனது அடுத்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதற்கான ஆடிஷனும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலையும் திருமுருகன் தனது ஆஸ்தான டிவிக்கு தான் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் திருமுருகனின் புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.