ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். அதன்பின் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. பாண்டி கமல் தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னை அறிமுகப்படுத்திய திருமுருகன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பாண்டி கமல் பேசியபோது, ‛‛நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். என்னுடைய மகள் பிறந்தநாள் விழாவுக்கு திருமுருகன் சாரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால், அவர் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் பிசியாக இருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜரிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், என் மகள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காமலேயே திருமுருகன் சார் முதல் ஆளாக வந்து தங்க கம்மலை பரிசாக கொடுத்தார்'' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.