அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் சேனல்களை பொறுத்தமட்டில் சீரியல்கள் மற்றும் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனமும் முன்னணி சேனல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இரண்டு சீரியல்களை வாங்கி ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கலர்ஸ் தமிழ் சேனல் பக்கம் திருப்ப முடியும் என முடிவெடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட் அடித்த 'கோலங்கள்' மற்றும் 'தென்றல்' ஆகிய தொடர்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி வருகிற 16ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு கோலங்கள் சீரியலும், 2 மணிக்கு தென்றல் சீரியலும் ஒளிபரப்பாகவுள்ளது.