நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரையில் சூப்பர் ஹிட் அடித்து ஆல் டைம் பேவரைட்டாக மக்கள் மனதில் இடம்பிடித்த தொடர் கோலங்கள். இந்த தொடர் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அண்மையில் யு-டியூபில் வெளியாகியும் நல்ல ரீச்சை பெற்று வருகிறது. இதற்கிடையில் சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால் இந்த தொடரில் இடம் பெற்ற தோழர் மற்றும் தில்லா கதாபாத்திரங்களுக்கு தற்போது சிறப்பு கவனம் பெற்று வருகிறது.
இதில் நடித்த நடிகர்களை பல ஊடகங்கள் பேட்டி எடுத்து வரும் நிலையில் தில்லா கதாபாத்திரத்தில் நடித்த சுப்பிரமணி தற்போது தான் குடும்ப வாழ்க்கையில் நுழைய போவதாக கூறினார். கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கிவிட்ட தில்லா சுப்பிரமணி சமூக சேவையில் கவனம் இருந்ததால் 24 வயதில் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும், இப்போது பலரும் இந்த வயதில் கல்யாணமா? என்று கேட்டாலும் அதையெல்லாம் தான் கண்டுகொள்ள போவதில்லை என்றும் கூறியுள்ளார்.