‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வந்துவிட்டது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்று வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இதற்கிடையில் போட்டியாளர்கள் மினிமம் கேரண்டியுடன் பணத்தை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலகும் வகையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படும். சென்ற சீசனில் சரத்குமார் பணப்பெட்டி டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் 6 லட்சம் பணத்துடன் பணப்பெட்டி வீட்டினுள் இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி பணப்பெட்டியை பார்த்துவிட்டு செல்கின்றனர். அதன்பிறகு அதிலிருக்கும் தொகை சிறிது சிறிதாக அதிகரித்து 8 லட்சமாக இருக்கிறது. சென்ற முறை ரசிகர்கள் பலரும் தாமரையை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் படி அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், தாமரை இறுதிவரை விளையாடினார். இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் தாமரை பணப்பெட்டியில் அக்கறை காட்டுவது போல் தெரியவில்லை. ப்ரோமோவின் முடிவில் ஜூலி மட்டும் 8 லட்சம் இருக்கும் பணப்பெட்டியின் முன் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.




