கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அதிக வரவேற்பு பெற்று, அந்த சேனலுக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது செம்பருத்தி தொடர் தான். இதில், கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஊர்வம்பு லெட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்களில் 1250 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்பருத்தி தொடர் நிறைவு பெற போவதாக வரும் தகவல் முதல் முறை இல்லை. 7 மாதங்களுக்கு முன்பே இந்த தொடர் முடித்து வைத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் கதையின் மெயின் லீடாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் தொடரை விட்டு விலகினார். எனவே, டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது. அதன்பிறகு அக்னி நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொடரை முடித்து வைக்க தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சேர்ந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பருத்தி தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஜீ தமிழ் புதிதாக மூன்று சீரியல்களை ரிலீஸ் செய்ய உள்ளது. அதில், தவமாய் தவமிருந்து தொடர் செம்பருத்தியின் இடத்தை பிடிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.