புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மேனன், தர்ஷா குப்தா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தொடக்கத்தில் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் போக போக போக அதன் சுவாரஸ்யம் குறைந்தது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே, தொலைக்காட்சி நிறுவனம் செந்தூரப்பூவே தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கவுள்ளதாகவும், அதே டைம் ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'சிப்பிக்குள் முத்து' என்கிற புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.