டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மேனன், தர்ஷா குப்தா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தொடக்கத்தில் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் போக போக போக அதன் சுவாரஸ்யம் குறைந்தது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே, தொலைக்காட்சி நிறுவனம் செந்தூரப்பூவே தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கவுள்ளதாகவும், அதே டைம் ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'சிப்பிக்குள் முத்து' என்கிற புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.




