இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
'சந்திரலேகா' தொடர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ மற்றும் அருண் குமார் ஆகியோர் மட்டும் தான் இதுநாள் வரையில் விலகாமல் லீட் ரோலில் நடித்து வந்தனர். இதில் சபரிநாதன் இரண்டாம் நாயகனாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரலேகா தொடரை விட்டு விலகுவதாக கடிதத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அவருக்கு பதிலாக பிரபல நடிகர் அஸ்வின் குமார் இனி சபரிநாதனாக நடிக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 'பெரிய மருது', 'சரணாலயம்', 'துருவங்கள் பதினாறு' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் 'தாமரை', 'லக்ஷ்மி கல்யாணம்', 'குல தெய்வம்', 'அழகிய தமிழ் மகள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.