ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் சில்மிஷம் சிவா. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அவர் தற்போது சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த போது மொழி தெரியாத காரணத்தால் பிச்சைக்காரன் போல தான் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், 'கலக்கப்போவது யாரும் 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனது போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதிகாலையில் 4 மணிக்கு கலக்கப்போவது யாரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு 6 மணிக்கு ஏர்போர்ட் சென்றேன். அங்கு என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியவில்லை. கடவுள் போல ரசிகர் ஒருவர் வந்து எல்லா உதவிகளையும் செய்து விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது வரை எனக்கு அஜித் சார் படம் என்று தெரியாது. ஹெச் வினோத் படம் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜித் சாரிடம் என்னை சில்மிஷம் சிவா என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அஜித் சார் உடனே என்னிடம் கைகொடுத்து ஹலோ சிவா என்றார். எனக்கு தலை எல்லாம் சுத்தி மயக்கமே வந்துவிட்டது.
ஷூட்டிங் முடிந்ததும் ஹோட்டலுக்கு போனேன். ஆனால், அங்கே மொழி தெரியாததால் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். என்னுடைய போன் பேக் எல்லாம் கேரவேனில் மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிச்சைக்காரன் மாதிரி வெளியே சுற்றினேன். கடைசியில் படத்தின் மேக்கப் குழுவினர் தான் என்னை ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் இது' என கூறியுள்ளார்.