ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் சில்மிஷம் சிவா. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அவர் தற்போது சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த போது மொழி தெரியாத காரணத்தால் பிச்சைக்காரன் போல தான் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், 'கலக்கப்போவது யாரும் 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனது போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதிகாலையில் 4 மணிக்கு கலக்கப்போவது யாரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு 6 மணிக்கு ஏர்போர்ட் சென்றேன். அங்கு என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியவில்லை. கடவுள் போல ரசிகர் ஒருவர் வந்து எல்லா உதவிகளையும் செய்து விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது வரை எனக்கு அஜித் சார் படம் என்று தெரியாது. ஹெச் வினோத் படம் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜித் சாரிடம் என்னை சில்மிஷம் சிவா என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அஜித் சார் உடனே என்னிடம் கைகொடுத்து ஹலோ சிவா என்றார். எனக்கு தலை எல்லாம் சுத்தி மயக்கமே வந்துவிட்டது.
ஷூட்டிங் முடிந்ததும் ஹோட்டலுக்கு போனேன். ஆனால், அங்கே மொழி தெரியாததால் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். என்னுடைய போன் பேக் எல்லாம் கேரவேனில் மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிச்சைக்காரன் மாதிரி வெளியே சுற்றினேன். கடைசியில் படத்தின் மேக்கப் குழுவினர் தான் என்னை ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் இது' என கூறியுள்ளார்.