புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார்.
ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் இவரது சமூகவலைதளம் பேஜை பார்த்த சீரியல் குழுவினர் கதைக்கு பொருத்தமான நாயகி என ஆஷா கவுடாவை ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கே அவரது பெர்மான்ஸ் பிடித்து போகவே அஷா கவுடா வசுந்தராவாக மாறினார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஆஷா கவுடாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், கோகுலத்தில் சீதை தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆஷா கவுடா இடம்பிடித்துள்ளார். தன் மேல் அன்பை காட்டும் தமிழ் மக்களின் பாசத்தை நினைத்து நெகிழும் அவர், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.