வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஜய் டிவி, பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். சன் டிவியின் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'சுமங்கலி', 'லெட்சுமி வந்தாச்சு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதற்கிடையில், திவ்யா கணேஷூக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் நின்றது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த அவர், அந்த மோசமான தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வருவதாகவும், தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்டனர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய திவ்யா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க, திவ்யா கணேஷ் 'மிக விரைவில்' என பதில் அளித்துள்ளார். ஆக மொத்தம் அம்மணிக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு அது யாரென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.