கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
விஜய் டிவி, பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். சன் டிவியின் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'சுமங்கலி', 'லெட்சுமி வந்தாச்சு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதற்கிடையில், திவ்யா கணேஷூக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் நின்றது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த அவர், அந்த மோசமான தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வருவதாகவும், தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்டனர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய திவ்யா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க, திவ்யா கணேஷ் 'மிக விரைவில்' என பதில் அளித்துள்ளார். ஆக மொத்தம் அம்மணிக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு அது யாரென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.