25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா துராடி. விஜய் டிவியின் 'ஆயுத எழுத்து' தொடரில் நடித்த வந்த சரண்யா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் 'வைதேகி காத்திருந்தால்' தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் மனமுடைந்த சரண்யா தனது சமூகவலைதளத்தில், 'இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. உழைப்பை உதாசீனப்படுத்தும் போது மனது வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டும் வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் சில எபிசோடுகள் ஹீரோவாக நடித்து, நடித்த காட்சிகள் முழுதாக கூட வெளிவராத காரணத்தால் முன்னாவும் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
வைதேகி காத்திருந்தால் தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் ஹீரோவாக ஒரு சில எபிசோடுகள் நடித்து வந்த போதிலும், சீரியலை நிறுத்த தயாரிப்புக்குழு மற்றும் டிவி நிறுவனம் முடிவு செய்தது. இந்த தொடர் மொத்தமாக 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.