ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஈஸ்வர் தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீயுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சில காலங்கள் நடிப்பில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் நீண்டநாள் கழித்து அன்பே சிவம் தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அன்பே சிவம்' தொடர் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் ஸ்ரீ, ரக்ஷா ஹோலா, கிருத்திகா லட்டு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இரண்டு தம்பதியினருக்கு இடையே நடக்கும் மோதலையும், காதலையும் மையப்படுத்தி சென்டிமெண்ட், ஆக்சன் என திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த தொடரில் நியூ என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




