ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மேற்கு வங்காளத்தில் பிறந்து வளர்ந்தவர் சுவலட்சுமி. வங்காள இயக்குநர் சத்யஜித் ரே 'உட்டோரன்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். வயது மூப்பு காரணமாக அவரது மேற்பார்வையில் அவரது மகன் சந்திப் ராய் படத்தை இயக்கினார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை 1994ம் ஆண்டில் இந்த படம் பெற்றது.
1995ம் ஆண்டு 'ஆசை' படத்தின் மூலம் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் ஜோடியாக 'கோகுலத்தில் சீதை' படத்தில் நடித்தார். இதுதவிர ‛நிலாவே வா, நீ வருவாய் என, பொன்மனம், மாயி, பொட்டு அம்மன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2001ம் ஆண்டு 'சூலம்' என்ற பக்தி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். கணவருடன் பல நாடுகளில் வாழ்ந்த சுவலட்சுமி தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.
அவரை மீண்டும் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் முயன்றார்கள். குறிப்பாக 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படித்தில் நடிக்க இயக்குனர் மோகன்ராஜா அழைத்தபோது நடிக்க மறுத்து விட்டார். இதேபோன்று 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' படத்திலும் நடிக்க வைக்க முயற்சித்தார். அவர் மறுத்து விட்டதால் நதியா நடித்தார். இதுபோன்ற பல ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி, சான்பிரான்சிகோ பல்கலைகழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.




