பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானவர் அபி நவ்யா. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், சின்னத்திரையில் நடிப்பதற்காக பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய காலங்களில் 250க்கு மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். பெரும்பாலான இடங்களில் ஓப்பனாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கேட்டனர். சினிமாவில் மட்டுமல்ல சீரியலில் நடிப்பதும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் பெண்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சினிமாவில் இன்னும் மீ டூ புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.