சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமானார். இசைவாணியில் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சதீஷ் என்ற கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசைவாணி தற்போது முன்னாள் கணவர் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'சதீஷ் என்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்து வருகிறார். என் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியுள்ளார். இதை தட்டிக்கேட்டால், அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசுவேன். கொலை செய்வேன் என மிரட்டுகிறார்' என்று அதில் தெரிவித்துள்ளார்.