50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இதில் நடிகர் முன்னா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் டைட்டிலும், ஹீரோவுக்கு கண் தெரியாத என்ற கான்செப்ட்டும் தான் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஆனால், சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே அனைவருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாத கதை ஓட்டம், திரைக்கதை காரணமாக பலருக்கு இந்த சீரியலை பிடிக்கவில்லை. இதன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார். இருப்பினும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தல் சீரியலை நிறுத்திவிட்டனர். 207 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ராஜபார்வை சீரியல் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் ரக்ஷிதா விலகிய பின் சறுக்கலாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதையும் முடித்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே 2 ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் விரைவில் வெளியாகிறது.




