ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. ஆரம்பத்தில் சற்று சறுக்கிய இந்த தொடர் அண்ணன் தங்கை பாசமலர் பார்முலாவில் சமீப காலங்களில் தூள் கிளப்பி வந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்வேதா கெல்கே. தமிழ் சின்னத்திரையில் வானத்தைப் போல சீரியலில் நடித்த பிறகு ஸ்வேதாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது . சீரியலும் டாப் கியரில் சென்று கொண்டிருக்க, திடீரென ஸ்வேதா சீரியலை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஸ்வேதா, 'நான் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான். நேற்று முன்தினம் (சனிக்கிழமை, டிசம்பர் 11) நான் துளசியாக நடிப்பது முடிவுக்கு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவுக்கு பதிலாக இனி துளசியாக ஜெமினி டிவியின் பிரபல சீரியல் நடிகையான 'மான்யா' நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.