பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. ஆரம்பத்தில் சற்று சறுக்கிய இந்த தொடர் அண்ணன் தங்கை பாசமலர் பார்முலாவில் சமீப காலங்களில் தூள் கிளப்பி வந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்வேதா கெல்கே. தமிழ் சின்னத்திரையில் வானத்தைப் போல சீரியலில் நடித்த பிறகு ஸ்வேதாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது . சீரியலும் டாப் கியரில் சென்று கொண்டிருக்க, திடீரென ஸ்வேதா சீரியலை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஸ்வேதா, 'நான் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான். நேற்று முன்தினம் (சனிக்கிழமை, டிசம்பர் 11) நான் துளசியாக நடிப்பது முடிவுக்கு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவுக்கு பதிலாக இனி துளசியாக ஜெமினி டிவியின் பிரபல சீரியல் நடிகையான 'மான்யா' நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.