39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
நடிகை பரீனா ஆசாத் தான் சீக்கிரம் பழைய வெண்பாவாக வந்துவிடுவேன் என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோதும் ஷூட்டிங்கில் எனர்ஜிட்டிக்காக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார். இந்நிலையில் பரீனாவுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவத்தின் காரணமாக வெண்பா சீரியலில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என பலரும் கருதிவந்தனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபரீனா ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். பரீனா ஆசாத்துக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ள நிலையில் மருத்துவமனையில் தான் இப்போது இருந்து வருகிறார். மருத்துவமனை பெட்டில் படுத்தவாறு செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நானும் எனது மகனும் நலமுடன் இருக்கிறோம். சுகப்பிரசவம் தான். விரைவில் திரும்புவேன்' என கூறியுள்ளார். இதன் காரணமாக பரீனா மிக விரைவில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.