பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகை பரீனா ஆசாத் தான் சீக்கிரம் பழைய வெண்பாவாக வந்துவிடுவேன் என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோதும் ஷூட்டிங்கில் எனர்ஜிட்டிக்காக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார். இந்நிலையில் பரீனாவுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவத்தின் காரணமாக வெண்பா சீரியலில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என பலரும் கருதிவந்தனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபரீனா ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். பரீனா ஆசாத்துக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ள நிலையில் மருத்துவமனையில் தான் இப்போது இருந்து வருகிறார். மருத்துவமனை பெட்டில் படுத்தவாறு செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நானும் எனது மகனும் நலமுடன் இருக்கிறோம். சுகப்பிரசவம் தான். விரைவில் திரும்புவேன்' என கூறியுள்ளார். இதன் காரணமாக பரீனா மிக விரைவில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.