இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக தொடங்கி நடிகையாக சின்னத்திரையில் பயணித்து கோடான கோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர். பழகுவதற்கு மிக இனிமையான குணம் கொண்ட அவர் சென்ற வருடம் எதிர்பாரத விதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.