மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெள்ளித்திரையில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் வந்த அருண் பிரசாத் அதை சின்னத்திரையில் சாதித்து காட்டிவிட்டார்.
நடிகர் அருண் பிரசாத் சேலத்தில் பிறந்து வளர்ந்து ஹீரோவாகும் ஆசையில் சென்னைக்கு வந்து விஸ்காமில் சேர்ந்து படித்தார். படிக்கும் போதே பல குறும்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 'மேயாத மான்' படத்தில் வைபவின் நண்பனாக நடித்ததன் மூலம் அருண் பிரசாத்தின் வெள்ளித்திரை கனவு ஓரளவு பலித்தது. தொடர்ந்து 'ஜடா' படத்தில் கதிரின் நண்பனாக நடித்தார். அதன் பின் சரிவர வாய்ப்புகள் வராத நிலையில் தான் விஜய் டிவி அவரை சீரியலுக்கு அழைத்தது. முதலில் தயங்கிய அருண் பிரசாத் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.
ஹீரோவாக இருக்கும் பாரதி நெகடிவ் ஷேடிலும், செண்டிமெண்ட் சீன்களிலும் கலக்கி வருகிறார். முதல் சீரியலிலேயே கைதேர்ந்த நடிகராக அசத்தி வரும் அருண் பிரசாத்துக்கு இன்று ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரண்டு படங்களில் நடித்தும் பலரால் அறியப்படாத அருண் பிரசாத், இன்று ஒரே சீரியலில் பலருக்கும் ஃபேவரைட்டான பாரதியாக பிரபலமாகியுள்ளார். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே கை கொடுக்கும் என்று நம்பும் அருண் வெள்ளித்திரை ஹீரோ கனவையும் விடாமல் துரத்தி வருகிறார். அவரது விடாமுயற்சி வெற்றி பெற்று அவரது கனவு பலிக்கட்டும்.