இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
வெள்ளித்திரையில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் வந்த அருண் பிரசாத் அதை சின்னத்திரையில் சாதித்து காட்டிவிட்டார்.
நடிகர் அருண் பிரசாத் சேலத்தில் பிறந்து வளர்ந்து ஹீரோவாகும் ஆசையில் சென்னைக்கு வந்து விஸ்காமில் சேர்ந்து படித்தார். படிக்கும் போதே பல குறும்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 'மேயாத மான்' படத்தில் வைபவின் நண்பனாக நடித்ததன் மூலம் அருண் பிரசாத்தின் வெள்ளித்திரை கனவு ஓரளவு பலித்தது. தொடர்ந்து 'ஜடா' படத்தில் கதிரின் நண்பனாக நடித்தார். அதன் பின் சரிவர வாய்ப்புகள் வராத நிலையில் தான் விஜய் டிவி அவரை சீரியலுக்கு அழைத்தது. முதலில் தயங்கிய அருண் பிரசாத் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.
ஹீரோவாக இருக்கும் பாரதி நெகடிவ் ஷேடிலும், செண்டிமெண்ட் சீன்களிலும் கலக்கி வருகிறார். முதல் சீரியலிலேயே கைதேர்ந்த நடிகராக அசத்தி வரும் அருண் பிரசாத்துக்கு இன்று ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரண்டு படங்களில் நடித்தும் பலரால் அறியப்படாத அருண் பிரசாத், இன்று ஒரே சீரியலில் பலருக்கும் ஃபேவரைட்டான பாரதியாக பிரபலமாகியுள்ளார். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே கை கொடுக்கும் என்று நம்பும் அருண் வெள்ளித்திரை ஹீரோ கனவையும் விடாமல் துரத்தி வருகிறார். அவரது விடாமுயற்சி வெற்றி பெற்று அவரது கனவு பலிக்கட்டும்.