2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
விஜய் டிவி சூப்பர் சிங்கரான சவுந்தர்யா பாலா நந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். வெள்ளித்திரையில் 'கபாலி', 'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், ஒரு நடிகை என்ற அந்தஸ்தை சவுந்தர்யாவுக்கு பெற்று தந்தது சின்னத்திரை தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' தொடரில் சவுந்தர்யா ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் சவுந்தர்யா மணமகளாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பின் சவுந்தர்யா சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.