தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து எலிமினேஷனே ஆகாமல் தாமாகவே போட்டியிலிருந்து விலகினார். ஆனல், அவர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 5, 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கான காரணங்களை ரசிகர்களிடம் இதுவரை யாரும் தெளிவாக தெரிவிக்கவில்லை. நமீதா மாரிமுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதாலும் படங்கள், மாடலிங் துறையின் மூலம் ஏற்கனவே நல்ல பிரபலம் அடைந்தவர் என்பதாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருந்தது. அவர் எந்த வித காரணமும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பலருக்கும் வருத்தத்தை தந்தது. உடல்நல பிரச்னையால் அவர் விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நமீதா மாரிமுத்து விரைவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து மட்டுமே வெளியேறினார். போட்டியிலிருந்து வெளியேறவில்லை. அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் நலம் பெற்று போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைவார் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் நமீதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டில் பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கின்றனர்.




