எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் எங்க வீட்டு மீனாட்சி. இதில் பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது காரைக்குடி செட்டிநாட்டு கூட்டு குடும்பத்தின் கதை. இந்த குடும்பத்தின் தலைவியாக வள்ளியம்மாள் என்ற கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். மீனாட்சி என்கிற டைட்டில் கேரக்டரில் நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். அவரது ஜோடியாக சிதம்பரம் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது: முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்கிறார்.