பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சூர்யா தயாரிப்பில் சில நாட்களுக்கு முன் ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இந்த படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார்.
அதோடு மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார். ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன் வந்து நஷ்ட ஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்கிறார்கள்.