ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த சனியன்று வெளியான திரைப்படம்'டாக்டர்'. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
நேற்று முன் தினம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றூள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரோனா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.