மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி |
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் பான்இந்தியா படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ராஜமவுலி, ரன்வீர்சிங் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும், ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சுனில், அஞ்சலி, மலையாள நடிகர் ஜெயராம் உள்பட பலர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக இப்படத்திற்கு விஸ்வம்பரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக புனேயில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முதல்கட்ட படப்பிடிப்பில் ராம் சரண்-கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட உள்ளது.