பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என்று வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசையை முறுக்கு படத்தை அடுத்து சிவகுமாரின் சபதம் படத்தையும் இயக்கி நடித்திருந்தவர், தற்போது அன்பறிவு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அடுத்தபடியாக மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவண் இயக்கும் படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கப்போகிறார். பேண்டஸி கதையில் உருவாகும் அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இதுவரை ஆதி நடித்த படங்களில் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




