டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

ஏ.பி.நாகராஜன்தான் மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படங்களின் தந்தை. அன்றைக்கு இருந்த குறைந்தபட்ட தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அவர் ரசிகர்களை மிரட்டினார். ஆனால் அதற்கு முன்னோடியான படம் 'வேதாள உலகம்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். முழு படத்தையும் காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷெட் போட்டு படமாக்கினார்.
வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கதைதான் 'வேதாள உலகம்'. இதனை ப.நீலகண்டன் திரைக்கதையாக எழுதினார். பேய் தேசத்தை ஆளும் சக்தி கொண்ட புத்தகத்தைப் பற்றிய இந்த கற்பனைக் கதை பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் விளிம்பில் இருந்த மக்களின் மனதில் உற்சாகத்தையும் பரப்பும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. முழுப் படமும் கறுப்பு -வெள்ளை நிறத்தில் இருந்தபோதும், கடைசி காட்சிக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு 'கட்டாயம் பார்க்க வேண்டிய' படமாக அமைந்தது.
டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, மங்கலம், கே.ஆர்.செல்லம் மற்றும் சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி 1948ம் ஆண்டு வெளியாகி அந்த காலகட்டத்திலேயே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்து. பிற்காலத்தில் 'மை டியர் குட்டிச் சாத்தான்' புதிய தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய வசூலை பெற்றதைப்போன்று இந்த படம் அன்றைக்கு பெரிய வசூலை பெற்றது. இந்த படத்தின் லாபத்தில்தான் மெய்யப்ப செட்டியார் சென்னையில் ஏவிஎம் நிறுவனத்தை தொடங்கினார்.




