லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
காதல் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் தனது திருமணம் முறிவை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா. அதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமந்தா பக்கமே தவறு இருப்பது போல பலரும் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர். சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாக செயல்பட துவங்கியுள்ள சமந்தா, இந்த விமர்சனங்கள் குறித்து ஒரு பரிதா என்கிற எழுத்தாளர் ஒருவரின் கருத்தை தனது பதிலாக பதிவிட்டுள்ளார்.
அதில், 'பெண்கள் செய்கின்ற விஷயமெல்லாம் இங்கே ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படும் என்பது மாறாத விஷயம் என்றால், ஆண்கள் செய்வது மட்டும் ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படுவதில்லையே ஏன்.? அப்படியானால் நமது சமூகத்தில் அடிப்படையிலேயே ஒழுக்கம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. பொதுவாக திருமண முறிவு என வரும்போது, அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்கிறபோது பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்று கூறுவதற்கு சமந்தா பதிலடி கொடுப்பதாகவே இந்த பதிவு அமைந்துள்ளது.