புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் முதியோர்களுக்கென பிரத்யேகமான யூ-டியூப் சேனல் தொடக்க விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் சேனலைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பிரபு சாலமன் பேசுகையில், எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு மூதாட்டி. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடினோம். அந்த தேடலையே ஒரு படமாக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
குறிப்பாக, நிறைய முதியவர்களை சந்திக்கவும் அவர்களிடம் உரையாடினேன். அவர்களிடமிருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டோம். அவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். முதியவர்களிடம் பொய், புரட்டு. வஞ்சம், வன்மம் எதுவும் இல்லை. முதியவர்களிடம் சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. நிறைய அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்கள் ஒரு நூலகம். அவர்களின் கைகளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும், என்றார்.