எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2022ம் ஆண்டு இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை இனிமையான ஆண்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பெரிய படங்கள் சில வெளியாக உள்ளன.
தமிழைப் பொறுத்தவரையில் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வலிமை' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புகளும் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு சில முக்கிய படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். இப்போது அந்தப் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' படமும் நுழைய உள்ளதால் மற்ற படங்கள் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 13ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்ஆர்ஆர்' படம் இப்போது நேரடியாக 'ராதே ஷ்யாம்' படத்துடன் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இரண்டு பெரிய படங்களும் வருவதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மற்ற தெலுங்குப் படங்களான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா', பவன் கல்யாண் நடிக்கும் 'பீம்ல நாயக்' ஆகிய படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டியுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்த மாற்றத்தால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிகிறது.