அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான படம் 'ராதேஷ்யாம்'. பான்--இந்தியா ஸ்டார் என 'பாகுபலி' படங்களின் மூலம் பெயரெடுத்து பிரபாஸ், 'சாஹோ' படத்தின் மூலம் ஹிந்தியில் மட்டும் சாதித்தார். மற்ற மொழிகளில் அப்படம் பலமாக சறுக்கியது.
'ராதேஷ்யாம்' படத்தை சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியதாக தகவல் வெளியானது. 200 கோடி ரூபாய் அளவிற்கு தியேட்டர் வியாபாரம் நடைபெற்றது. ஹிந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், 25 கோடி வசூலைத் தாண்டுவதற்கே படம் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
ஒரு வாரம் முன்பு படத்தின் வசூல் 150 கோடியைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் எந்த வசூல் விவரத்தையும் வெளியிடவில்லை. கடந்த நான்கு நாட்களாக படம் பற்றி எதுவுமே பதிவிடவில்லை.
படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்றே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இப்படத்தின் மூலம் நஷ்டம் வரும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வசூல் ஏற்படுத்திய பாதிப்பால் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் பான்--இந்தியா படங்களின் வியாபாரம் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.