மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
சினிமாவில் நடித்த கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் நடந்து கொண்டு நைஜீரிய நடிகர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம்-2 படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழக வில்லன்களுக்கு உதவும் நைஜீரிய வில்லனாக டேனி சபானி என்கிற நைஜீரிய நடிகர் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் அவரது உதவியாளராக உடன் நடித்தவர்களில் ஒருவர் தான் செக்வுமே மால்வின் என்பவர். அவர்தான் தற்போது நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.