'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சினிமாவில் நடித்த கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் நடந்து கொண்டு நைஜீரிய நடிகர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம்-2 படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழக வில்லன்களுக்கு உதவும் நைஜீரிய வில்லனாக டேனி சபானி என்கிற நைஜீரிய நடிகர் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் அவரது உதவியாளராக உடன் நடித்தவர்களில் ஒருவர் தான் செக்வுமே மால்வின் என்பவர். அவர்தான் தற்போது நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.