பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ராக்ஸ்டார். இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் போட்டியிடும் நிகழ்ச்சி. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், முதன் முறையாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தவிர பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தனர். இதன் இறுதிசுற்று போட்டி சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 26 செப்டம்பர்) அன்று மாலை 6.30 மணிக்கு மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.