பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ராக்ஸ்டார். இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் போட்டியிடும் நிகழ்ச்சி. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், முதன் முறையாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தவிர பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தனர். இதன் இறுதிசுற்று போட்டி சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 26 செப்டம்பர்) அன்று மாலை 6.30 மணிக்கு மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.