பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் |
கண்ணான கண்ணே தொடரில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிஆர்பியிலும் ரோஜா தொடருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் நாயகி மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகாவும் தந்தையாக நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் பப்லுவும் நடித்து வருகின்றனர்.
சீரியலில் சீரியஸாக இருக்கும் பப்லு ஆஃப் ஸ்கிரீனில் ஸ்போர்டிவாக பல சேட்டைகளை செய்து செட்டை கலகலப்பாக வைத்திருப்பாராம். அந்த வகையில் நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருக்க, பப்லு தரையில் ஊர்ந்து சென்று நிமிஷிகாவின் காலை சீண்டுகிறார், இதனால் பயத்தில் நிமிஷிகா துள்ளிக்குதித்து அலறுகிறார். இந்த வீடியோவை பப்லு தனது இண்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய அது தற்போது வைரலாக பரவி வருகிறது.