வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ்நாட்டில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 28ம் தேதி, அதற்கடுத்து செப்டம்பர் 3ம் தேதியும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை. செப்டம்பர் 9ம் தேதி 'லாபம்', 10ம் தேதி 'தலைவி', 17ம் தேதி 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. கடந்த ஒரு மாதத்தில் அதிக பட்சமாக கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது.
ஆனால், நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி ''பிளான் பண்ணி பண்ணனும், சூ மந்திரக்காளி, பேய் மாமா, வீராபுரம், சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, சிண்ட்ரல்லா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் ஏற்படலாம்.
இருப்பினும், இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், மக்கள் தான் தியேட்டர்கள் பக்கம் இன்னும் அதிகமாக வரத் தயங்குகிறார்கள்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பெரிய படங்கள் வர உள்ளதால் அப்போது தியேட்டர்கள் கிடைக்க பிரச்சினையாக இருக்கும். அதனால், இந்த வாரம் இத்தனை படங்கள் வெளிவருதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.